வணக்கம்.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நிறைவு விழா.
நேற்று நடந்த கலைநிகழ்ச்சியில் பறை இசை, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, புலியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த அனைத்து நிகழ்ச்சியையும் சிறப்பாக அமைத்துக் கொடுத்து தமிழரின் பாரம்பரிய கலைகளை உலக அளவில் எடுத்துச் சென்று ரசிகர்களை குவித்து பாராட்டுகளை பெற வைத்த அனைத்து கலைக்குழு ஆசான்களுக்கும் கத்தர் தமிழர் சங்கம் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த கலை நிகழ்ச்சியை எத்தனை சிரமங்கள் வந்தாலும் நடத்தியே தீருவோம் என்று அயராது பாடுபட்டு உறுதுணையாக இருந்த அனைத்து மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கும் துணைக் குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் தன்னார்வ நலத் தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி !
மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்!