இரத்த தான முகாம் 2025

அன்புள்ள கத்தர் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்களே,

வணக்கம்.

கத்தர் தமிழர் சங்கம் மாபெரும் இரத்த தான முகாமை வருகின்ற ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை ஹமாத் மெடிக்கல் கார்ப்பரேசன் (H.M.C) எச்.எம்.சி இரத்த தான மையத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த இரத்த தான முகாமில் நீங்கள் அனைவரும் கலந்துக் கொண்டு உயிர் காக்கும் சீரிய இரத்ததானத்தை செய்யுமாறு அன்போடு அழைக்கிறோம்.

இத்தகவலை உற்றார் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து, இந்த சீரிய நோக்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள Google form ஐ பயன்படுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்குறோம்.

https://forms.gle/YzFQNDr49zGm9JKa7

இரத்தம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு:

⛑ QID CARD அல்லது QATAR LICENSE அல்லது HEALTH CARD ID

⛑ இந்தியா, நேபாள், பாகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு கத்தரில் ENTRY ஆனது முதல் 4 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும்

⛑ குறைந்தது 6 மணி நேரமாவது தூங்கி இருக்க வேண்டும்.

⛑ இரவு வேலை செய்தவர்களுக்கு இரத்தம் எடுக்கப்படாது.

⛑ குறைந்தது 50 KG இருத்தல் வேண்டும், 50 KG குறைவான எடை உள்ளவர்களுக்கு இரத்தம் எடுக்கப்படாது.

⛑ ஏற்கனவே இரத்தம் கொடுத்தவர்கள் இரத்தம் கொடுத்த நாளிலிருந்து இரண்டு மாதம் கழித்திருந்தால் மறுபடியும் இரத்தம் கொடுக்கலாம்.

⛑ அரிதான இரத்த வகைகளும் (Rare Blood Group) எடுக்கப்படாது.